' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஊரான ஊரிழந்தோம்....!!!!!

ஊரான ஊரிழந்தோம்....!!!!!

வரிகள் - சேரன் உருத்திரமூர்த்தி

ஊரான ஊரிழந்தோம்..
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்..
பாராள வந்தவரே
உம்மையுந்தான் நாமிழந்தோம்.

பொன்னான மேனியிலே -- ஒரு
பொல்லாப்பு வந்ததில்லை
கண்ணான மேனியிலே - எவர்
கண்ணூறும் பட்டதில்லை

ஊரான ஊர் இழந்தோம்..........!!!

ஆற்றோரம் மணல் மேடு
மணல் மேட்டில் பட்டிப்பூ
பட்டிப்பூ பூத்திருக்கு
யார் வரவைப் பார்த்திருக்கு...
யார் வரவைப் பார்த்திருக்கு...
யார் வரவைப் பார்த்திருக்கு....!

ஊரான ஊர் இழந்தோம்
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்
பாராள வந்தவரே
உம்மையுந்தான் நாமிழந்தோம்...

பொன்னான மேனியிலே -- ஒரு
பொல்லாப்பு வந்ததில்லை
கண்ணான மேனியிலே - எவர்
கண்ணூறும் பட்டதில்லை
கண்ணூறும் பட்டதில்லை ...
கண்ணூறும் பட்டதில்லை....!

ஊரான ஊர் இழந்தோம்...

கடலே இரையாதே
காற்றே நீ வீசாதே
நிலவே எரியாதே
எம் நெஞ்சம் எல்லாம் தீயாச்சே
நெஞ்சம் எல்லாம தீயாச்சே
நெஞ்சம் எல்லாம் தீயாச்சே....!!!

ஊரான ஊரிழந்தோம்
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்
பாராள வந்தவரே
உம்மையுந்தான் நாமிழந்தோம்..!!

 

கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...