' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மெல்லத் தமிழினி | பாரதியார் பாடல்கள்

 

“கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன் 
காதில் விழுந்த திசைமொழி எல்லாம் 
என்னென்னவோ பெயருண்டு – பின்னர் 
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்! 

தந்தை அருள் வலியாலும் – முன்பு 
சான்ற புலவர் தவ வலியாலும் 
இந்தக் கணமட்டும் காலன் – என்னை 
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் 

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி 
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்! 
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு 
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! 

"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச 
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் 
மெத்த வளருது மேற்கே – அந்த 
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 

சொல்லவும் கூடுவதில்லை – அவை 
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த 
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" 

என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ! 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் 
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 

தந்தை அருள் வலியாலும் – இன்று 
சார்ந்த புலவர் தவ வலியாலும் 
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ் 
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." 


 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...