' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

 


அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்  உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!

பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
கோடீஸ்வரி

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...