' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் – சுகிசிவம்

 









ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி

இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி

உணர்வு கலங்கி ஒழுகிய விந்து

ஊறு சுரோணித மீது கலந்து


பனியில் ஓர் பாதி சிறு துளி மாது

பண்டியில் வந்து புகுந்து திரண்டு

பதுமம் அரும்பு கமடம் இதென்று

பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற


உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்

ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை

உதரம் அகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து


ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்

உவந்து முகந்திட வந்து தவழ்ந்து

மடியில் இருந்து மழலை மொழிந்து

வா இரு போ என நாமம் விளம்ப


உடைமணி ஆடை அரைவடம் ஆட

உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு

தெருவில் இருந்து புழுதி அளைந்து

தேடிய பாலரொடு ஓடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே


உயர் தரு ஞான குரு உபதேச

முந்தமிழின் கலையும் கரை கண்டு

வளர்பிறை என்று பலரும் விளம்ப

வாழ் பதினாறு பிராயமும் வந்து


மதனசொரூபன் இவன் என மோக

மங்கையர் கண்டு மருண்டு திரண்டு

வரிவிழி கொண்டு சுழிய எறிந்து

மாமயில் போல் அவர் போவது கண்டு


மனது பொறாமல் அவர் பிறகு ஓடி

தேடிய மாமுதல் சேர வழங்கி

வளமையும் மாறி இளமையும் மாறி

வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு


வயது முதிர்ந்து நரைதிரை வந்து

வாதவிரோத குரோதம் அடைந்து

செங்கையினில் ஓர் தடியுமாகியே

வருவது போவது ஒருமுதுகூனு


மந்தி எனும்படி குந்தி நடந்து

மதியும் அழிந்து செவிதிமிர் வந்து

வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

கலகல என்று மலசலம் வந்து


கால்வழி மேல்வழி சாரநடந்து

கடன்முறை பேசும் என உரைநாவு

தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து


பூதமுநாலு சுவாசமும் நின்று

நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளர்பிறை போல எயிரும் உரோமம்

உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு


மனதும் இருண்ட வடிவும் இலங்க

மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக

மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து


மடியில் விழுந்து மனைவி புலம்ப

மாழ்கினரே இவர் காலம் அறிந்து

வரிசை கெடாமல் எடும் எனஓடி

வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து


கடுகி நடந்து சுடலை அடைந்து

மானிட வாழ்வென வாழ்வென நொந்து

விறகுஇடை மூடி அழள் கொடுபோட

வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்


உருகி எலும்பு கருகி அடங்கி

ஓர்பிடி நீறும் இலாத உடம்பை

நம்பும் அடியேனை இனி ஆளுமே....


கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...