' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

குண்டலகேசி

 குண்டலகேசி

 

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

தொல்காப்பியம், யாப்பருங்கலம், வீரசோழியம், நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெறுகின்றன. 

 

நிலையாமைக் கோட்பாடு

இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றைக் கூறி, கணந்தோறும் நாம் இறந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லை. இதற்கு என்ன காரணம்? அறியாமைதானே? இப்படிக் கூறுவதின் வாயிலாகக் கூற்றுவன் வருவதற்கு முன் அறச்செயல்களைச் செய்து நல்வினையைப் பெருக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறது குண்டலகேசி. அந்தப் பாடலைப் பார்ப்போமா?

 பாளையாம் தன்மை செத்தும்     
    பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
    காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பு பின்னே
    மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால்
    நமக்கு நாம் அழாதது என்னே!

கருத்துகள் இல்லை

பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்

 பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்     பாடல் ஒலிப்பதிவின்போது   நீண்ட நீண்ட காலம்-நீ,  நீடு வாழ வேண்டும்! வானம் தீண்டும் தூரம்-நீ,   வளர்ந்து...