' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அப்பா பாடல்

 அப்பா

 "அப்பன் செத்தால் தெரியும் அப்பன் அருமை;
உப்புச் சமைந்தால் தெரியும் உப்பின் அருமை"
என்று ஒரு பழமொழியுண்டு. எந்தப் பொருளினதும்
அருமை பெருமை பற்றியும்
அது எம் கையில் இருக்கும் வரையில் தெரியவில்லை.
அது எம்மைவிட்டுப் போனதன் பிறகு அல்லது அதை
எம்மிடமிருந்து பறித்தெடுத்தத‌ன் பிறகு தான்
அதைப்பற்றி எண்ணிப் பார்க்கிறோம்.
அதன் அருமையை உணருகிறோம்.

 இன்று எனது அப்பாவின் நினைவு தினம்.
இது தவறு. ஏனெனில் அவர் நினைவுகள் என்றும்  என்னுடன் பயணிக்கிறது.
அப்பாவின் கைகோர்த்து நடக்க ஆசைப்படுபவர்க்கு மட்டுமே புரியும் 
அது நடக்காது எனும் பொது ஏற்படும் இந்த  வலி. 
அவரின் நினைவுகளை அசைபோடும் இந்த வரிகள்.
 
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcQjtCfDxlTkJy1gVXnpl0OhEJoRV5dRN00NFw&usqp=CAU
 
 
 

 
 
 
ஆல்பம் : அப்பா பாட்டு (2018)
இசை : கரிசல் கருணாநிதி
பாடியவர் : கரிசல் கருணாநிதி
பாடல்வரிகள் : ஏகாத‌சி




அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும்
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்
பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு
பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு
பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக‌ இருப்பாரு
பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு
அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும்
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்


மேல்சட்ட போட்டதில்ல கால் செருப்பும் கேட்டதில்ல‌
பாய் விரிச்சி படுத்ததில்ல பட்டகடனால் தூங்கம்வல்ல‌
மேல்சட்ட போட்டதில்ல கால் செருப்பும் கேட்டதில்ல‌
பாய் விரிச்சி படுத்ததில்ல பட்டகடனால் தூங்கம்வல்ல‌
உப்பு முட்ட தூக்கிகிட்டு ஊர்ஊரா நடப்பாரு
உறங்கினாலும் எழுப்பிவிட்டு திண்பன்டம் தான் கொடுப்பாரு
உப்பு முட்ட தூக்கிகிட்டு ஊர்ஊரா நடப்பாரு
உறங்கினாலும் எழுப்பிவிட்டு திண்பன்டம் தான் கொடுப்பாரு
தலைக்கு எண்ண தேய்ச்சதில்ல கண்ணாடிய பாத்ததில்ல‌
தலைக்கு எண்ண தேய்ச்சதில்ல கண்ணாடிய பாத்ததில்ல‌
அவர் உழச்சி உழச்சி காய்ச்சதுல உள்ளங்கையில் ரேகையில்ல‌

அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும்
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்


சித்திரம் போல் அம்மாவ பத்திரமா பாப்பாரு
வாக்கப்பட்டு மக போக தெம்பி தெம்பி அழுவாரு
சித்திரம் போல் அம்மாவ பத்திரமா பாப்பாரு
வாக்கப்பட்டு மக போக தெம்பி தெம்பி அழுவாரு
காய்ச்ச வந்து படுத்தாலும் மாத்திரதான் திண்பதில்ல‌
நல்ல சோறு ஒருநாளும் எங்கப்பா உண்டதில்ல‌
காய்ச்ச வந்து படுத்தாலும் மாத்திரதான் திண்பதில்ல‌
நல்ல சோறு ஒருநாளும் எங்கப்பா உண்டதில்ல‌
கைநீட்டி கேட்டாக்கா கடமுழுதும் வாங்கி தருவாரு
கைநீட்டி கேட்டாக்கா கடமுழுதும் வாங்கி தருவாரு
அவரு காசு பணத்த தேடி தேடி கருப்படைஞ்சி போனாரு

அப்பா கையை புடிச்சி நடந்தா தெரு அழகாக‌ மாறும்
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்


படம்: தவமாய் தவமிருந்து
இசை : சபேஷ் முரளி
பாடியவர்கள் : சபேஷ், ஜெயகுமார்
பாடல்வரிகள் : சினேகன்





ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு உங்க அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு உங்க அப்பா
பொத்தி பொத்தி வளத்தாங்க பாசத்த காட்டி
நிலா வாங்கி தரேன்னாங்க சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே நடைவண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பாரி ஆட்டி
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு உங்க அப்பா

பள்ளிக்கூடம் நான் போகையிலே பம்பரமா தினம் ஒடுவேண்டா
வாத்தியார நான் பாக்கையிலே வணக்கஞ்சொல்லி நல்லா பாடுவேண்டா
அந்தக்கால படிப்பை எல்லாம் படிக்க தாண்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம பரிட்சையிலே தோத்தேன்
அந்தக்கால படிப்பை எல்லாம் படிக்க தாண்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம பரிட்சையிலே தோத்தேன்
நான் படிக்க நெனைச்சதெல்லாம் நீ படிக்கோணும்
என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கணும்
உங்கள பெத்ததே சந்தோசம் நான் பெத்ததே சந்தோசம்
சிங்கத்த பெத்ததே சந்தோசம் ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோசம்
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு உங்க அப்பா

வானம் பொழிகிறது பூமி விளைகிறது
யாரை கேட்கிறாய் வரி
எதற்கு கேட்கிறாய் கிஸ்தி ஹா ஹா…
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் டா
நான் மக்களை காக்குற மனுஷ சாமியடா
கட்டபொம்மன் வாளுக்கு காப்பு கையிற கட்டுவேண்டா
பட்டாளத்து வீரனாட்டம் பகையறுக்க போறேனடா
நான் வெள்ளைக்கார பயலுகள வேட்டையாட வந்தவன்டா
டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும்
டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும் ஹா ஹா …

தோளுமேல என்ன தூக்கிகிட்டு ஊர்வலமா எங்கய்யா போவாரய்யா
என்னை தேச்சி என்ன குளிக்க வைக்க ஒரு நாட்டியமே எங்கம்மா அடுமப்பா
செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை தெரியவில்ல
உலகத்த நான் புரிஞ்சிக்கிட வழியும் தெரியவில்ல
செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை தெரியவில்ல
உலகத்த நான் புரிஞ்சிக்கிட வழியும் தெரியவில்ல
பெத்தவங்க போன பின் தான் வாழ்க்க புரிஞ்சிச்சி
உங்க அம்மா வந்த பின் தான் பொறுப்பு வந்துச்சி
உங்கள பெத்ததே சந்தோசம் நான் பெத்ததே சந்தோசம்
மக்களை பெத்ததே சந்தோசம் என் மக்களை பெத்ததே சந்தோசம்
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு உங்க அப்பா
பொத்தி பொத்தி வளத்தாங்க பாசத்த காட்டி
நிலா வாங்கி தரேன்னாங்க சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே நடைவண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பாரி ஆட்டி



அப்பா எப்ப வருவீங்கள்





பாடல்: இணுவையூர் மயூரன்    
இசை: இணுவையூர் உமாசதீஸ் 

அப்பா எப்ப வருவீங்கள்
ஆசை முத்தம் தருவீங்கள்
அம்மா போன பின்னால
ஆதரவா யார் எமக்கு
ஆயிரம் உறவு அருகிருந்தும்
அப்பா போல யார் எமக்கு
அண்ணனோட காத்திருக்கேன்
அப்பா எப்ப வருவீங்கள்?
சைக்கிளில பள்ளி செல்ல
சாமத்தில அணைச்சுத் தூங்க
தோளில் வைச்சு சாமிகாட்ட
துயரத்திலும் துணையிருக்க
கை பிடித்து கடை போக
அப்பா எப்ப வருவீங்கள்?
கருவினிலே கண்ட மகளே
கனவாக இருக்குதம்மா
அருகினில் வந்திருந்து
ஆசை முத்தம் தந்துவிட
மனசெல்லாம் தவிக்குதம்மா
காலமொன்று கூடிவரும்
கனவுகள் மெய்ப்படும்
அருகினில் வந்திருப்பேன்
ஆசைகள் கை கூடும்
அதுவரை பொறுத்திடம்மா
அன்பு மகளே… செல்லமகளே..








மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க!
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க!
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்!
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி.)
மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்!
உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .
நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!
இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!
புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!
போர்க்களம் நீ புகும்போது - முள்
தைப்பது கால் அறியாது!
மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?
கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!


வீச்சருவா மீசை அந்த மீசை மேல ஆசை





அப்பா உன்னை போல



Music : K.P.Ram Lyrics : Thozhan Singer : VM.Mahalingam Producer : M.E.Muthaia (VIGILANCE A.O OF INDIA) Cinematographer : Terry derose Editor/ Colourist : Jegan Chakkaravarthi Percussion : Sruthiraj Dhilruba : Saroja Mix & Master : Siva Co ordinator : Jeyachandran Studio : 2keys Video Production : Last Bench Works Released by : VM.PRODUCTION
 



அன்புள்ள அப்பா அப்பா

 



அப்பாவின் பாசம்



படப்பிடிப்பு :- GTA Video Entertainment (கெங்கா) அப்பாவின் பாசம். இப் பாடல் அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம். பாடல் வரிகள் தமிழ்மணி :- க. உயிரவன் ஒலிப்பதிவு :- சுதர்சன் பாடியவர் :- அபிநயா பவன்
 
 




அப்பா மகன்/மகள் இடையே உள்ள பாசபோராட்டத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிமிக்க பாடல்கள் | Sentiment Songs.



அப்பா வரமாட்டாரா..! | M. S. பாஸ்கர் | Appa - M. S. Bhaskar இன் குரலில்


 




















கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...