' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை "இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

 

 


 

படம் : ஆசைமுகம்
பாடியவர் :
T. M. சௌந்தரராஜன்
இசை :
S. M. சுப்பையா நாயுடு
இயற்றியவர் : கவிஞர் வாலி

 

"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
"இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

 எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு

ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்

உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி 

உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி

உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

 

கருத்துகள் இல்லை

தமிழ் ஓசை

கானா வடிவில் பாரதி பாடல்... அரங்கத்தை அசரவைத்த ஜேம்ஸ் வசந்தனின்  தமிழ் ஓசை குழு   மின்னஞ்சல்: vaathamilpadi@gmail.com