' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – முனைவர் மாவை சச்சிதானந்தன்

 

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?

பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?
காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன்
கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும்
செட்டியார் வீட்டிலே கலியாணம்
சிவனார் கோயில் விழாக்கோலம்
மேரி வீட்டிலே கொண்டாட்டம்
மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம்
கண்டிப் பக்கம் குளிரோ கடுமை
காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை

பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா?
காக்கை: பொங்கலன்று வருவாராம்
புத்தகம் வாங்கி வருவாராம்
பந்தும் வாங்கி வருவாராம்
பாவை உமக்குத் தருவாராம்
மிகவும் நல்லாய்ப் படியென்று
கடிதம் நேற்றுப் போட்டாராம்
காகா என்று கரையட்டாம்.

– மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன், ஈழம்:

ஆனந்தத் தேன்

முனைவர் மாவை சச்சிதானந்தன் B.A (Hons) London. M.Phil in Psychology (London) Ph. D (Jaffna) அவர்கள்

Mine coins - make money: http://bit.ly/money_crypto
முனைவர் மாவை சச்சிதானந்தன் B.A (Hons) London. M.Phil in Psychology (London) Ph. D (Jaffna) அவர்கள்

Mine coins - make money: http://bit.ly/money_crypto

கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...