' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரி

 


கன்னியாகுமரியில் 133 அடி  உயரத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை,
தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிதிறந்து வைத்த தினம் இன்று.

( *01 ஜனவரி 2000*)


இச்சிலை சர்வதேசப்புகழ்பெற்ற  சிற்பி கணபதி ஸ்தபதியால் உருவாக்கப்பட்டது.

பீடத்தின் 38 அடி உயரம்  திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

உட்புற மண்டபச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

 


 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...