' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆதியாய் அனாதியாய்...

 

இறுவெட்டு: பரணி பாடுவோம்
பாடியவர்: SG சாந்தன்
பாடலாசியர்: கவிஞர் முல்லை செல்லக்குட்டி
இசை: இசைவாணர் கண்ணன்

ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ் (2)

அன்புக்கு விளக்கேற்றி
ஆறம் காத்ததெங்கள் தமிழ் (2)

ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ்

மேதினியில் வீரமதால்
மேன்மை கொண்டதெங்கள் தமிழ் (2)

மேலான தத்துவத்தின்
பொருள் சொன்ன ஞானத்தமிழ் (2)

ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்

திசை எட்டும் ஒலி கொட்டி
புகளிட்டு உரமிட்ட
செந்தமிழ் எங்கள் தமிழ்

திடமுள்ள நெஞ்சங்கள்
புடமிட்டு வாழ்ந்திட்ட
வேங்கையின் வீரத்தமிழ்

படை கொண்டு வந்தவர்
பகை வென்று விளையாடும்
பைந்தமிழ் நம் செந்தமிழ்

பாவலர் நாவலர்
காவலர் வீரம் அதை
பாடிப் புகழ்ந்திட்ட பைந்தமிழ்
 
குறுக்கத் தறித்த குறளால் உலகம்
தெளியத் தழைத்த செந்தமிழ்
குமரி முதலாக இமையம் வரையாக
முடி கொண்டு வாழ்ந்த முத்தமிழ்

அடிமை ஆவதோ
பகைவன் பிடியில் மாள்வதோ
தமிழா ஆண்மை இல்லையோ
உரிமையில் ஆசை இல்லையோ

ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ் (2)

அன்புக்கு விளக்கேற்றி
ஆறம் காத்ததெங்கள் தமிழ் (2)


கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...