' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்


 

 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை – நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
                                          (எல்லாரும்…) 

இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் – சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் – அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
                                                    (எல்லாரும்…) 

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் – பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் – யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
                                                (எல்லாரும்…) 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை – நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
                                            (எல்லாரும்…) 

– 1964-ல் வெளிவந்த ‘கருப்புப் பணம்’ திரைப்படத்திற்காக இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

கருத்துகள் இல்லை

தமிழ் ஓசை

கானா வடிவில் பாரதி பாடல்... அரங்கத்தை அசரவைத்த ஜேம்ஸ் வசந்தனின்  தமிழ் ஓசை குழு   மின்னஞ்சல்: vaathamilpadi@gmail.com