' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே!

 
 

 
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா?
 
வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லயே
ஏன் நீயும் நானும் நூறு வருஷம்
இருப்பதில்ல பாரு
 
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா?
 
நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும் சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை  மறந்து தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே...
பாதை மாறி போகாதே...
பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே
 
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா?
 
ஹே... கருவறைக்குள் தானாக கற்று கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே
 
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா?
 
வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏன் நீயும் நானும் நூறு வருஷம்
இருப்பதில்ல பாரு
 
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
 
திரைப்படம்: மௌனம் பேசியதே
பாடல்வரிகள்: சினேகன்
இசை: யுவன் ஷங்கர்ராஜா
பாடியவர்: கார்த்திக்
இயக்குனர்: அமீரின் முதல் திரைப்படம்
திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2002

கதை

காதலை வெறுக்கும் ஒரு நண்பன், காதலில் இருக்கும் நண்பன் இருவரின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எவ்வாறு மாறுகிறான், அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.


கருத்துகள் இல்லை

தமிழ் ஓசை

கானா வடிவில் பாரதி பாடல்... அரங்கத்தை அசரவைத்த ஜேம்ஸ் வசந்தனின்  தமிழ் ஓசை குழு   மின்னஞ்சல்: vaathamilpadi@gmail.com